1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 3,24,269 பேர் கைது!

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 3,24,269 பேர் கைது!


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதியை மீறியதாக 3.24 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3,06,339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 கோடியே 27 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாடுவதை தடுப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியே முக்கிய என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like