1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ. 300 டிக்கெட் வெளியீடு..!!

நாளை மறுநாள் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ. 300 டிக்கெட் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like