1. Home
  2. தமிழ்நாடு

செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி 30 லட்ச ரூபாய் மோசடி!

செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி 30 லட்ச ரூபாய் மோசடி!


செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி பல்வேறு வங்கிகளில் அடகு வைத்து 30 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (38) மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மாதேஸ்வரன் செம்பு வளையல்களை வாங்கி அதில் தங்க முலாம் பூசிவிடுவார். அதன்பிறகு வங்கிகளுக்கு எடுத்துச் சென்று அடகு வைக்க வேண்டும் என்று கூறி கொடுப்பார்.

இப்படி பல்வேறு வங்கிகளில் அடகுவைத்து மோசடி செய்துள்ளார். பல்வேறு வங்கிகளில் போலியான நகைகளை 30 லட்ச ரூபாய்க்கு அடகுவைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வங்கி அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் வங்கி அதிகாரி புகார் கொடுத்தார்.

புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாதேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like