1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!

Q

கேரள மாநிலம் வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில் ராதா, 45, என்ற பெண், சில தினங்களுக்கு முன் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, வயநாடு வைதிரி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அழுகிய நிலையில், ஒரு புலியின் உடல் கிடைத்தது. அது, ராதாவை கொன்ற புலி என தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே மேலும் மூன்று புலிகள் இறந்து கிடந்தன. வயநாடு குறிச்சியாடு வனப்பகுதிக்குள் இரண்டு புலிகளின் உடல்களை, ரோந்து பணிக்கு சென்ற வனத்துறையினர் மீட்டனர். அருகே உள்ள காபி தோட்டத்தில் இன்னொரு புலியும் இறந்து கிடந்தது.
அடுத்தடுத்து மூன்று புலிகள் உயிரிழந்ததால், இதற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழுவை அமைத்து, அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் உத்தரவிட்டார். இதற்காக, வடக்கு மண்டல தலைமை வனக்காவலர் கே.எஸ்.தீபா தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. புலிகள் மரணத்திற்கான காரணத்தை வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like