3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. தூக்கத்தில் உயிரிழந்த பரிதாபம்.. 20 பேரை தேடும் பணி தீவிரம் !

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே விபத்தின்போது அதில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கினர்.
கட்டிட இடிபாடுகளில் 20 முதல் 25 பேர் வரை சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
#WATCH Maharashtra: Rescue operation by NDRF (National Disaster Response Force) underway at the site of building collapse in Bhiwandi, Thane.
— ANI (@ANI) September 21, 2020
Eight people have lost their lives in the incident which took place earlier today. pic.twitter.com/dFvXwhHPH3
newstm.in