1. Home
  2. தமிழ்நாடு

தெய்வகுழந்தை தப்பியோட்டம்.. உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் !

தெய்வகுழந்தை தப்பியோட்டம்.. உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் !


தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்ற தெய்வகுழந்தை என்பவரை பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை கடந்த 20அம் தேதி பைக் ஒன்றை திருடிய வழக்கில் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்க அவரை போலீசார் அழைத்துச்சென்றார்.

அப்போது ஓடும் காரில் இருந்து கைதி மாயகிருஷ்ணன் குதித்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். அப்போது விரட்டிச் சென்று அவரை பிடிக்க முயன்றப்போதும் தப்பிவிட்டார்.

இதனையடுத்து மாயகிருஷ்ணனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 22ஆம் தேதி தனிப்படையினரால் மாயகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து மாயகிருஷ்ணன் என்ற தெய்வக்குழந்தை தப்பி ஓடிய போது, கைதி வழிக்காவல் பணியில் அலட்சியமாக இருந்ததாக, புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் சுடலைமுத்து ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like