1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்ட பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – குஷியில் மாணவர்கள்!

1

தமிழகத்தில் அக். 23ம் தேதி திங்கட்கிழமை ஆயுதபூஜை அக். 24ம் தேதி விஜயதசமி பண்டிகைகள் கொணடாடப்படவுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக். 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடப்பு ஆண்டு ராஜராஜ சோழனின் 1,038- வது சதய விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வரவுள்ளது.

Trending News

Latest News

You May Like