1. Home
  2. தமிழ்நாடு

சூடான பாலில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு !

சூடான பாலில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு !


மதுரை மேலமடை எழில்நகர் நகர் பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று பெய்த தொடர் கனமழையால் பால் விற்பனையாகாமல் அப்படியே வீட்டில் இருந்துள்ளது. இதனால் மீதமிருந்த பாலை தயிராக மாற்ற பெரிய வட்டத்தில் காய்ச்சி சூடான பாலை வீட்டின் நடுப்பகுதியில் வைத்திருந்துள்ளனர்.

அப்போது முத்துக்கிருஷ்ணனின் இரண்டு வயது மகன் பார்த்தசாரதி அந்த வீட்டில் ஓடிஆடி விளையாடியதாக கூறப்படுகறிது. அந்தநேரத்தில் எதிர்பாராதவிதமாக சூடான பால் வைக்கப்பட்டிருந்த வட்டத்தில் பார்த்தசாரதி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like