1. Home
  2. தமிழ்நாடு

வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது: இன்று மனுத்தாக்கல்..!!

வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது: இன்று மனுத்தாக்கல்..!!

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அ.தி.மு.க. சட்டதிட்ட விதி எண். 20(அ)பிரிவி -2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளர் வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 18-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை 19-ம் தேதியாகும். அன்றைய தினம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21-ம் தேதி செவ்வாய்க் கிழமை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 27-ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகள் தலைமை கழகத்தில் கட்டண தொகை ரூ. 25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். கட்சியின் விதிமுறைகளை பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம். தேர்தல் ஆணையாளர்களாக கட்சியின் துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விஸ்வநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like