1. Home
  2. தமிழ்நாடு

சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை..!!

சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை..!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சோளக்காட்டில் எதோ ஒன்று எரிந்துகொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதன் அருகில் சென்று பார்த்த போது அது மனித உடல் என்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் நகர போலீசார், எரிந்த அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த உடல் யாருடையது, கொலை செய்து எரிக்கப்பட்டதா? என்ன காரணம்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் இளைஞர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Trending News

Latest News

You May Like