1. Home
  2. தமிழ்நாடு

2 வருடங்களுக்கு பிறகு.. முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்த தீவு!

2 வருடங்களுக்கு பிறகு.. முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்த தீவு!


கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அதன் பின் உலகளவில் கொரோனா படிப்படியாக குறைந்தாலும் சில நாடுகளில் மீண்டும் கொரோனா உச்சத்தை அடைந்து வருகின்றது.

நியூசிலாந்திற்கு அருகில் ‘குக்’ என்னும் தீவு ஒன்று உள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று இடம்பெறாத சிறப்பு மிக்க தீவாக இது விளங்கியது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தங்கள் குடிமக்களை மீட்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விமானத்தில் தனது குடும்பத்தினருடன் திரும்பி வந்த 10 வயது சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதன் மூலம் இந்த சிறுவன் தான் கொரோனாவால் பாதிக்கப்படும் முதல் நபர் என்று கூறப்படுகின்றது. இந்த தீவில் சுமார் 17 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இங்கு வசிக்கும் 96 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like