கோவில் சுத்தம் செய்ய சென்ற +2 மாணவன் மின்சாரம் தாக்கி பலி!
தஞ்சாவூரை சேர்ந்தவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வீரமணி (வயது17). இவர், நேற்று அவர் கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான பணிகள் செய்து உள்ளார். அப்போது அவர் கோவிலை சுத்தம் செய்வதற்காக எந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்துள்ளார்.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர் மீது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பட்டதில் மாணவர் வீரமணி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவன் வீரமணியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் வீரமணி பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவில் சுத்தம் செய்ய சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.