+2 முடிவுகள் 2025 : அரியலூர் மாவட்டம் முதலிடம், கடைசி இடத்தில் வேலூர்..!

இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் - 3,73,178, மாணவியர்கள் - 4,19,316 என மொத்தம் 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவர்கள் -3,47,670, மாணவியர்கள் -4,05,472 என மொத்தம் 7,53,14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுத 10,049 மாணவர்கள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியமாக தேர்ச்சி : முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிக தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
1. அரியலூர் - 98.82 %
2. ஈரோடு - 97.98 %
3. திருப்பூர் - 97.53 %
4. கோயம்புத்தூர் - 97.48 %
5. கன்னியாகுமரி - 97.01%
அரசு பள்ளி மாணவர்களின் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாணவர்கள்
1. அரியலூர் - 98.32 %
2. ஈரோடு - 96.88 %
3. திருப்பூர் - 95.64 %
4. கன்னியாகுமரி - 95.06 %
5. கடலூர் - 94.99 %
கடைசி 5 இடம்பிடித்த மாவட்டங்கள்
குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற கடைசி 5 இடத்தில் உள்ள மாவட்டங்களில் வேலூர் 90.79 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
1. வேலூர் - 90.79%
2. கள்ளக்குறிச்சி - 90.96%
3. திருவள்ளூர் - 91.49%
4. புதுக்கோட்டை - 92.55%
5. ராணிபேட்டை - 92.78%