1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை..!!

இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை..!!

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது . அதனை போலவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

இதனால் பக்தர்களை நலனை கருதி திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 29 மற்றும் மே 13ஆம் தேதி வேலை நாட்களாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like