1. Home
  2. தமிழ்நாடு

சோழன் விரைவு ரயிலில் சிக்கிய 19.5 கிலோ வெள்ளிப் பொருட்கள்..!

1

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலில் போலீஸார் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி, 19.5 கிலோ எடையிலான வெள்ளிப்பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.19 லட்சம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கமலேஷ், லோகேஷ் ஆகிய இருவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலங்கானா உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருளாக வழங்க எடுத்து செல்லப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like