1. Home
  2. தமிழ்நாடு

17 வயது மாணவிக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் : சிக்கிய உருக்கமான கடிதம்..!

1

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் இவர். ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனகபள்ளி மாவட்டத்தில் இவருடைய குடும்பம் வசித்து வருகிறது. விடுதியில் தங்கி கல்லூரி படிக்கிறார் இவர். இரவு 10 மணிக்கு பிறகு விடுதிக்கு வராததால் நிர்வாகம் அவரது வீட்டாருக்கு அழைத்து காணவில்லை என கூறி இருக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:50 மணி அளவில் அந்த பெண்ணிடம் இருந்து மிக நீளமான குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. மேலும், இந்த செய்தியை பார்த்து, யாரும் பதற்றமடைய வேண்டாம் என்கிற விஷயத்தையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.17 வயது பெண் அவருடைய குடும்பத்திற்கு அனுப்பிய மெசேஜில், "தயவுசெய்து யாரும் பதற்றமடைய வேண்டாம்.. கேளுங்கள் நான் ஏன் சாகிறேன் என என்னால் சொல்ல முடியாது.. ஆனால் நான் சொன்னாலும் உங்களுக்கு அது புரியுமா என தெரியவில்லை.. என்னை மறந்து விடுங்கள்.. என்னை மன்னித்து விடுங்கள்.. அம்மா, அப்பா என்னை பெற்று வளர்த்ததற்கு நன்றி.. என்னுடைய வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது" என குறிப்பிட்டு இருந்தார்.

தனது அக்கா கூடிய விரைவில் குழந்தையை பெற்றெடுக்க போவதை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும், தனது தங்கையை படிப்பிலும் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துமாறும் மற்றவர்கள் சொல்கிற பேச்சைக் கேட்டு கவனச்சிதறலடையாதே எனவும் அனுப்பி இருக்கிறார்.

கல்லூரியில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். இது குறித்து ஆசிரியர்களிடம் புகார் கொடுத்திருக்கலாமே என நீங்கள் என்னை கேட்கலாம்.. ஆனால் இது எதுவும் உதவாது.. என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் என்னுடைய போட்டோக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள்.. இதை வைத்து என்னை மிரட்டுகிறார்கள்.

நான் மட்டுமல்ல கல்லூரியில் இன்னும் சில பெண்களும் இவர்களிடம் மாட்டி இருக்கிறார்கள். நாங்கள் வேறு யாரிடமாவது சொன்னால் எங்களுடைய புகைப்படங்களை வெளியே விட்டு விடுவோம் என மிரட்டுகிறார்கள். அதனால் எங்களால் கல்லூரிக்கு வராமல் இருக்கவும் முடியவில்லை.. நாங்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டோம்.. போலீசாரை அணுகினாலும் ஆசிரியர்களிடம் கூறினாலும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை நான் எடுப்பதற்கான காரணம், இப்போது நான் இறந்துவிட்டால் சில காலங்களுக்கு என்னை நினைத்து வருத்தப்படுவீர்கள், அதன் பிறகு என்னை மறந்துவிடுவீர்கள்.. ஆனால் நான் உங்களுடனே இருந்தால் நீங்கள் என்னை பார்க்கும்போதெல்லாம் எனக்காக வருத்தப்படுவீர்கள்.. என தனது அப்பாவிற்கு காரணத்தை விலக்கியிருக்கிறார்.

சில மணி நேரங்களில் இந்த 17 வயது பெண்ணின் உடல் கல்லூரி வளாகத்தில் காணப்பட்டது..இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட பெண் போலீசில் வழக்கு பதிவு செய்தார்.

Trending News

Latest News

You May Like