1. Home
  2. தமிழ்நாடு

முதியவரிடம் ரூ.6 கோடி மோசடி செய்த 17 வயது சிறுவன்!

முதியவரிடம் ரூ.6 கோடி மோசடி செய்த 17 வயது சிறுவன்!


காப்பீட்டு நிறுவன ஏஜென்ட் என ஏமாற்றி 17 வயது சிறுவன் 86 வயது முதியவர் ஒருவரிடம் ரூ.6 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 17 வயது சிறுவனும் அவரது நண்பர்கள் சிலரும் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 86 வயது முதியவரை தொடர்புகொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் அதற்காக வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.

முதியவரிடம் போன் செய்து வங்கித் தகவல்களை சேகரித்தவர்கள் அதில் உள்ள பணத்தை தாங்கள் ஏற்கெனவே வைத்திருந்த வங்கிக்கணக்கில் மாற்றியுள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளும் போலியான ஆவணங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.

இதற்காக அவர்கள் 35க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை உருவாக்கியுள்ளனர். பிறகு அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு கால்செண்டரையே நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுமிகப்பெரிய மோசடி என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like