17 வயது சிறுமிக்கு 13 இடங்களில் கத்திகுத்து.. திருமணம் முடிந்த சில மாதங்களில் சோகம் !

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வி.அம்மாபட்டி பகுதியில் தவுடன் - முத்துலட்சுமி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசக்தி பாலா ( 17) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஜெய்சக்தி பாலாவுக்கும், விருதுநகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமானவர் சிறுமி என்பதால், 18 வயது நிரம்பிய பின்னர் சேர்ந்து வாழலாம் என போலீசார் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜெயசக்தி பாலா வி. அம்மாபட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஜெயசக்தி பாலாவின் உடலில் 13 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடல் அருகே ஹெட்போன் ஒன்றும் கிடந்தது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் பெருமாள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜெயசக்தி பாலாவின் உடல் அருகே கிடந்த ஹெட்போன் யாருடையது? அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சிறுமியை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in