1. Home
  2. தமிழ்நாடு

வேலூரில் இன்று புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று!

வேலூரில் இன்று புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று!


வேலூர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது, மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வேலுர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2126ஆக உயர்ந்துள்ளது. 768 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 30,927 பேருக்கு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 

வேலூரில் இன்று புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று!

newstm.in

Trending News

Latest News

You May Like