1. Home
  2. தமிழ்நாடு

16 தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் கடிதம்!!

16 தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் கடிதம்!!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12-ந்தேதியன்று இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்துக்குள் நடந்த 3-வது சம்பவம் ஆகும். மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.


16 தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் கடிதம்!!

அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன. எனது முந்தைய கடிதங்களில், இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன்.

இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நீங்கள் உடனடியாக இதில் தலையிடவேண்டும்.


16 தமிழக மீனவர்கள் கைது – முதலமைச்சர் கடிதம்!!

எனவே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடி படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like