1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் 10 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு!

மீண்டும் 10 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு!


கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்து கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதித்த நபர் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அதன்பின்னர் அம்மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது.

மீண்டும் 10 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு!

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அம்மாநிலத்தில் அதிகமாகி வருகிறது. கொரோனா காரணமாக 90,000க்கும் மேற்பட்டோர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பும் அதிகமாக உள்ளது.

இதனால், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், உள்பட 10 மாவட்டங்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like