1. Home
  2. தமிழ்நாடு

கஜேந்திரா படத்தின் நடிகையை 14 மாதங்கள் அடைத்து வைத்து சித்திரவதை..!!

கஜேந்திரா படத்தின் நடிகையை 14 மாதங்கள் அடைத்து வைத்து சித்திரவதை..!!

கேப்டன் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் புளோரா சைனி. அதன் பின்னர் இவர் குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ப்ளோரா சைனி பேசுவது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

’’நான் 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். இந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். விளம்பர படங்களிலும் நடித்து வந்தேன். அந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்தேன். அதன் பின்னர் என் வாழ்க்கையே மாறிப் போய்விட்டது.


கஜேந்திரா படத்தின் நடிகையை 14 மாதங்கள் அடைத்து வைத்து சித்திரவதை..!!

அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்தினார். என்னை கடுமையாக அடித்து காயப்படுத்தினார். என் செல்போனையும் பிடுங்கிக் கொண்டார் .14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்திரவதை செய்தார். யாரிடமும் பேசக்கூடாது என்றும் என்னை அடைத்து வைத்திருந்தார். அவரிடம் 14 மாதங்கள் நான் நரக வேதனையை அனுபவித்தேன் . கடைசியாக ஒரு நாள் அந்த தயாரிப்பாளரை விட்டு ஓடி வந்து விட்டேன். இப்போது என் பெற்றோருடன் சேர்ந்து இருக்கிறேன். பெற்றோருடன் சேர்ந்து விட்டதால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பிரபல நடிகை ஒருவர் பிரபல தயாரிப்பாளர் மீது கூறியிருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்த வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்த இருக்கிறார்கள்.


Trending News

Latest News

You May Like