எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தாக்குதலில் வீடுகள், வாகனங்கள் சேதமடைந்ததால், ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.