1. Home
  2. தமிழ்நாடு

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று சென்னை, கோவை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று பகலை தொடர்ந்து நள்ளிரவும் மழை பெய்ததால் சென்னையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

அதே போல், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் இதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதுபோலவே மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோவையில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் இதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like