ஓடும் ரயில் பாத்ரூமில் 12 வயது சிறுமி பலாத்காரம்..!

ஓடும் ரயிலில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 20 வயது சக பயணி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா நோக்கி ரெயில் வந்தபோது, சிறுமி கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனை வெகு நேரமாக நோட்டமிட்ட சக பயணி பின்தொடர்ந்து சென்று கழிவறையில் வைத்து அவரை வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார்.
சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். யதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.