1. Home
  2. தமிழ்நாடு

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர்!!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர்!!

72 வயது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கனோட் என்ற பகுதியில்தான் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் மோகன்லால் ரேகார் (72) என்பவர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சிறுமி தனியாக இருந்ததை அறிந்த முதியவர், பள்ளி ஒன்றின் கழிவறைக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அச்சிறுமி இந்த விஷயத்தை அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறினார்.


12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர்!!


சிறுமி கூறியதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதியவர் மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரியவந்ததை அடுத்து, போலிஸார் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

பின்னர் முதியவர் மோகன்லாலை பிடித்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். முதியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர்!!


சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ளது. உயர் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like