1. Home
  2. தமிழ்நாடு

நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சோகம்!!

நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சோகம்!!

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சான் சால்வடோரில் உள்ள கஸ்கட்லான் மைதானத்தில் அலியான்ஸ் மற்றும் FAS ஆகிய இரு அணிகளுக்கு இடையே முக்கியமான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஒரே நேரத்தில் போட்டியை பார்க்க மைதானத்தில் நுழைந்த நிலையில், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிக்கிக்கொண்டனர்.


நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சோகம்!!

இதில் பலர் மூச்சு திணறி சரிந்தநிலையில் ஒருவர் மீது ஒருவர் மிதித்துச்சென்றதால் பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் நயீப் புகேலே உறுதி அளித்துள்ளார்.


நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சோகம்!!

கால்பந்து கூட்டமைப்பு, மைதான பொறுப்பாளர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like