1. Home
  2. தமிழ்நாடு

பாலியல் தொல்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!!

பாலியல் தொல்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!!


சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் மேலும் ஒரு சோக நிகழ்ந்து நடந்துள்ளது.

சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாய் மற்றும் மகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

பாலியல் தொல்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!!

தாய் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கிட்ட நிலையில் இருந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!!

மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் சமூகத்தை கடுமையாக திட்டியுள்ளார்.

உறவினர்களை நம்பாதீர்கள், என் இறப்புக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like