1. Home
  2. தமிழ்நாடு

10வது படித்திருந்தால் போதும்..! தமிழ்நாடு அரசு கோவிலில் வேலை..!

1

அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவியின் பெயர்: சீட்டு விற்பனையாளர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பதவியின் பெயர்: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

3. பதவியின் பெயர்: கூர்க்கா

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

4. பதவியின் பெயர்: ஏவலர் 

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

5. பதவியின் பெயர்: சலவை தொழிலாளர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

6. பதவியின் பெயர்: திருவலகு

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

7. பதவியின் பெயர்: பெருக்குபவர்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31.500 வரை

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

8. பதவியின் பெயர்: உப கோயில் எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பதவியின் பெயர்: ஓதுவார்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

10. பதவியின் பெயர்: உப கோயில் மேலக்குழு

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.

11

Trending News

Latest News

You May Like