1. Home
  2. தமிழ்நாடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 20ஆம் தேதி தொடக்கம்?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 20ஆம் தேதி தொடக்கம்?


கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 20ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெறவில்லை. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு எழுதாமல் தேர்ச்சி என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், 10ஆம் வகுப்புக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று (20.04.20) செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்தார். மே 3ஆம் தேதிக்கு பிறகு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறினார். 

இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு மே 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

newstm.in

Trending News

Latest News

You May Like