1. Home
  2. தமிழ்நாடு

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!


தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இம்மாதம் இறுதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கொரோனா 3வது அலை 18 வயதிற்கு உட்பட்டவர்களை அதிகம் தாக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், 10 முதல் 12ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது.

அத்துடன், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. மாணவர்களும் தினசரி அச்சத்துடனே பள்ளிகளுக்குச் சென்று வரும் நிலையும் உள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இன்னும் சில நாட்களில் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like