1. Home
  2. தமிழ்நாடு

10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர்..!

1

திருச்சியில் செய்தியாளர்கள் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது., இ-பேருந்துகள், தாழ்தள பேருநதுகள், புனரமைக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பேருந்துகளை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளாக மாற்றி இயக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் 10,020 பேருந்துகள் ஈடு செய்யப்படும். போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். 

கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது 15 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழக அரசின் கீழ் இயங்கும் 8 மண்டலங்களில் இயக்கப்படும் 10,020 பழைய பேருந்துகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவை இந்த ஆண்டுக்குள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Trending News

Latest News

You May Like