1. Home
  2. தமிழ்நாடு

10 மாத குழந்தையுடன் காரில் ஏறிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை!!


மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மும்பை -அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இளம் பெண் ஒருவர் சாலையில் வாகனத்திற்காக காத்திருந்தார். அவர் போஷிரி என்ற பகுதிக்கு செல்ல தனது 10 மாத கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வாடகை கார் ஒன்று அந்த பெண் செல்ல வேண்டிய பகுதி நோக்கி சென்றது. அதில் வேறு சில பயணிகளும் இருந்த நிலையில், ஷேர் செய்து அதில் பயணிக்க முடிவெடுத்து கைக்குழந்தையுடன் ஏறியுள்ளார்.


10 மாத குழந்தையுடன் காரில் ஏறிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை!!


கார் சிறிது தூரம் சென்ற நிலையில், ஓடும் காரிலேயே அந்த பெண்ணுக்கு டிரைவரும் சக பயணிகளும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து அந்த பெண்ணின் கைக்குழந்தையை பிடுங்கி காரில் இருந்து வீசினர். இதில் சாலையில் விழுந்த குழந்தை சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது.


10 மாத குழந்தையுடன் காரில் ஏறிய பெண்ணுக்கு பாலியல் கொடுமை!!


அந்த பெண்ணையும் ஓடும் காரில் இருந்து அவர்கள் கீழே தள்ளினர். இதில் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like