1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் +1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு..!

1

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது. https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like