இந்த மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!
அரசு உத்தரவின்படி, 09.10.2022 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.