1. Home
  2. தமிழ்நாடு

சாரதா மடத்தின் தலைவர் மரணம்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

சாரதா மடத்தின் தலைவர் மரணம்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா காலமானார். அவருக்கு வயது 102. அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாரதா மடத்தின் தலைவர் மரணம்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பு சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா.

102 வயதான பிரவ்ராஜிகாவுக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இ்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரவ்ராஜிகாவின் உயிரிழந்தார். பிரவ்ராஜிகா பக்திபிரணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like