1. Home
  2. தமிழ்நாடு

முத்தத்தால் நின்ற திருமணம்!

முத்தத்தால் நின்ற திருமணம்!



உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் மணமகன் முத்தம் கொடுத்ததால் திருமணத்தை மணமகள் நிறுத்தி உள்ளார்.

சம்பால் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணிற்க்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டபோது, திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள், அனைவரது முன்னிலையிலும் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதி திருமணத்தை நிறுத்தினார். அனைவரும் சமாதானப்படுத்த முயன்றும் மணப்பெண்ணின் முடிவை மாற்ற முடியவில்லை.

அனைவரின் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று காவல்நிலையத்திற்கு சென்று இளம்பெண் புகார் அளித்தார். காவல்துறையினரும் மணப்பெண்ணை சமதானப்படுத்த முற்பட்டும் பலனிளிக்கவில்லை.மேலும் அந்த பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் மண மேடையில் இருந்த போது மணமகன் என்னை தகாதமுறையில் தொட்டதாகவும், அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன் என புகார் அளித்துள்ளார்.



முத்தத்தால் நின்ற திருமணம்!

தனது நண்பர்களிடம் சவால் விட்டதால் மேடையில் முத்தமிட்டதாக மணமகன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மணப்பெண் அநாகரிகமாக நடந்து கொண்டவரை கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like