1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து : 64 பேர் படுகாயம்..!!

சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து : 64 பேர் படுகாயம்..!!

மயிலாடுதுறையில் இருந்து பேருந்து மூலம் 64 பெரியவர்கள் , 9 குழந்தைகள் என 73 ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுள்ளனர். சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய அவர்கள், நிலக்கல் அருகே இலவுங்கல் எருமேலி வரும்போது 3 வது வளைவில் பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்ட் துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் களமிறங்கினர்.

உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், பேருந்திற்குள் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெட்வொர்க் இல்லாத சபரிமலை வனப்பகுதியில் விபத்து நடந்ததால், விபத்து குறித்த விவரங்கள் தெரியவே தாமதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 64 பேர் காயம் அடைந்ததாகவும், ஓட்டுநர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவுஜ்ம் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.ஐயர் கூறியதாவது, சுகாதாரத் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும், தற்போது அதிகபட்ச மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறினார்.



Trending News

Latest News

You May Like