1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கை ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர்..!!

விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கை ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர்..!!

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது,

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அத்திக்கடவு – அவினாசி திட்ட பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்துள்ளோம். இதனால், பவானி காலிங்கராயன் தடுப்பணையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-க்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.


விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கை ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர்..!!

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கையாக இருப்பது அத்திக்கடவு - அவிநாசி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள்வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like