1. Home
  2. தமிழ்நாடு

கொடூரம்! 5ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!


அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவி, பியூன் உள்ளிட்டோரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி முடிந்த வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது பியூன் வேலை பார்க்கும் அஜய் குமார் (54) என்பவர் மாணவியை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறியுள்ளார்.

பின்னர் மாணவியை தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று மயக்க ஊசி செலுத்தியுள்ளார். பின்னர், அஜய் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


கொடூரம்! 5ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பின்னர், மாணவியை பள்ளி வாசலிலேயே விட்டுச் சென்றனர். வீட்டுக்கு சென்ற மாணவி தனது தாயாரிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இந்த விஷயம் பள்ளி முதல்வருக்கு தெரியவந்ததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள சிறுமிக்கு காவல்துறையினர் கவுன்சலிங் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான ப்யூன் அஜய் குமாரை போலீஸார் கைது செய்தனர்.


கொடூரம்! 5ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!


அவர் மீது போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், டெல்லி மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like