1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!!

ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத்தின் பேங்க் மோட் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரா கிளினிக் மற்றும் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவர் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையின் முதல் தளத்தில் மருத்துவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதலில் ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ, பின்னர் பரவியதாக கூறப்படுகிறது. விபத்தின் போது அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நகரின் பேங்க் மோட் காவல் நிலையப் பகுதியில் உள்ள டெலிபோன் எக்சேஞ்ச் சாலையில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.


மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!!

இது தொடர்பாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் விரைந்து வந்து கடும் முயற்சிக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அனைவரும் அவசரமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்தில், மருத்துவமனை மேலாளர் டாக்டர் பிரேமா ஹஸ்ரா மற்றும் அவரது கணவர் டாக்டர் விகாஸ் ஹஸ்ரா, தாரா, சுனில் ஹம்ரு உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கையை நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இச்சம்பவத்தில் மருத்துவர் தம்பதி, மருத்துவரின் மருமகன், பணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மருத்துவமனையின் வெவ்வேறு அறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மருத்துவமனை மேலாளர் டாக்டர் விகாஸ் ஹஸ்ராவின் உடல் தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. தீயில் இருந்து தப்ப முயன்றபோது, ​​மருத்துவர் தண்ணீர் தொட்டிக்குள் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.




Trending News

Latest News

You May Like