போலீஸ் அதிர்ச்சி! அடி பம்பில் இருந்து கொட்டிய மதுபானம்!!
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக இரண்டு கிராமங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் ஒரு கை அடி பம்பை ஒன்றை பார்த்தனர்.
அந்த பம்பில் அடித்த போது தண்ணீருக்கு பதிலாக மதுபானம் கொட்டியது. இதை பார்த்த போலீஸ் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். 7 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்து அடி பம்பு மூலம் மதுபானம் வெளியேற்றபட்டதை கண்டு பிடித்தனர்.
இந்த சோதனையின் போது மொத்தம் 1200 லிட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து 400 லிட்டருக்கும் அதிகமான மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்தாக இதுவரை 2,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in