1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..!! ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது..!!

மக்களுக்கு அடுத்த ஷாக்..!! ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது..!!

தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000ஐ தாண்டியது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டிருக்கிறது.


மக்களுக்கு அடுத்த ஷாக்..!! ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது..!!

இதற்குமுன் கொரோனா காலத்தில் 2020ல் ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.5,420 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, சவரன் ரூ.43,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.44,000ஐ தாண்டியது. ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90ம், சவரனுக்கு ரூ.720ம் அதிகரித்து ரூ.44,040ஆக உள்ளது.

வெள்ளியின் விலையும் ஒரு கிராம் ரூ.76ல் இருந்து ரூ.1.80 அதிகரித்து ரூ.77.80ஆக விற்பனையானது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பணவீக்கம் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like