என்எல்சி நிறுவனத்தில் 4,036 பேர் ஓய்வு.. காலியாகும் பணியிடம் தமிழருக்கு கிடைக்குமா..?
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது.
கண்ணபிரான் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடுத்த நான்கு ஆண்டுகளில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் எனக் கேட்டிருந்தார். அவருடைய இந்த கேள்விக்கு தற்போது பதில் தரப்பட்டுள்ளது. அதில், ‘நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காலியாகும் பணியிடங்கள் வட மாநிலத்தவர்களுக்கு சென்று விடுமோ என்ற அச்சம் கடலூர் பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளதால் அந்தப் பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.