1. Home
  2. தமிழ்நாடு

'பொன்னியின் செல்வன்' வசூல்.. 4 நாட்களில் இத்தனை கோடியா..?

'பொன்னியின் செல்வன்' வசூல்.. 4 நாட்களில் இத்தனை கோடியா..?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி, கடந்த 30-ம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் 250 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்தப் படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் 250 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் ரூ 78.29 கோடி வசூலித்தது. இரண்டாவது நாளில் ரூ.60.16 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.64.42 கோடியும் வசூலித்தது. மேலும் நான்காவது நாளில் ரூ.47 கோடி வசூல் செய்து மாபெரும் வசூலை ஈட்டியது.

இதன்மூலம், முதல் வார இறுதியில் உலகளவில் ரூ.250 கோடியை வசூலித்தது. இது ஒரு பெரிய சாதனையாகும். பொன்னியின் செல்வன் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.86 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் ரூ.21.34 கோடியும், மூன்றாவது நாள் ரூ. 22.51 கோடியையும் ஈட்டியுள்ளது. நான்காவது நாளான நேற்று ரூ.13.08 கோடியுடன் மொத்தம் இதுவரை நான்கு நாட்களில் ரூ.82.79 கோடியை வசூலித்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like