1. Home
  2. தமிழ்நாடு

வரும் 4-ந் தேதி தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்..!!

வரும் 4-ந் தேதி தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்..!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மேற்படி தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


Trending News

Latest News

You May Like