1. Home
  2. தமிழ்நாடு

திருமணம் முடிந்த 3 ஆவது நாளே மனைவி காணவில்லை ...விசாரித்த போது தெரிய வந்தது அது அவளுக்கு 6 ஆவது திருமணம்..!!

திருமணம் முடிந்த 3 ஆவது நாளே மனைவி காணவில்லை ...விசாரித்த போது தெரிய வந்தது அது அவளுக்கு 6 ஆவது திருமணம்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் ( 35). இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தியா(26) என்பவரை கடந்த 7-ம் தேதியன்று தனது உற்றார், உறவினர் புடைசூழ திருமணம் செய்தார். திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (45), என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச் சென்றனர்.

தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார். இரண்டு நாட்கள் இல்லறம் இனிதே நடைபெற்றது. மூன்றாவது நாள் காலையில் விடிந்து எழுந்த தனபாலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் இல்லாத மனைவி வீட்டில் வேறு எங்கும் இல்லை. தேடினால் எங்கும் கிடைக்கவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தபோது அலைபேசி அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது மொபைல் போன், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள், புரோக்கர் பாலமுருகன் மொபைல் போன்களும், ஆப் செய்யப்பட்டிருந்தன.

திருமணம் முடிந்த 3 ஆவது நாளே மனைவி காணவில்லை ...விசாரித்த போது தெரிய வந்தது அது அவளுக்கு 6 ஆவது திருமணம்..!!

இதனால் சந்தேகம் அடைந்த தனபால் உடனடியாக பீரோவை திறந்து பார்த்திருக்கிறார். பட்டுப்புடவை உள்ளிட்ட சந்தியாவின் பொருட்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. இதனால் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகைகளை எடுத்துக் கொண்டு சந்தியா தப்பிச் சென்றிருப்பதை உணர்ந்த தனபால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (45), என்ற புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது.

அதைப்பார்த்த தனபால், தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார். இதையடுத்து, புரோக்கர் தனலட்சுமியிடம் உறவினர்கள் மூலம், வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். போட்டோக்களை மட்டும் பார்த்து, போனிலேயே திருமணம் நிச்சயம் செய்து, நேற்று காலை, திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் (37) ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்தனர். காரை ஜெயவேல் (38) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.

அங்கு வந்த போது, கணவர் தனபால், அவரது உறவினர்கள் இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்து, பரமத்தி வேலுார் போலீசில் தனபால் உறவினர்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை 6 பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது.

திருமணம் முடிந்த 3 ஆவது நாளே மனைவி காணவில்லை ...விசாரித்த போது தெரிய வந்தது அது அவளுக்கு 6 ஆவது திருமணம்..!!

சந்தியா, அவரது கூட்டாளிகள், யாரையாவது திருமணம் செய்து, இரண்டு நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அய்யப்பன், ஜெயவேல் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆறாவது திருமணம் செய்த, 15 நாட்களுக்குள், ஏழாவது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட வந்த பெண்ணின் துணிச்சலை பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like