1. Home
  2. தமிழ்நாடு

பெரும் அதிர்ச்சி.. கண்டித்த ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை சுட்ட மாணவன்..!

பெரும் அதிர்ச்சி.. கண்டித்த ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை சுட்ட மாணவன்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவர் தனது ஆசிரியரை ஓட ஓட விரட்டி நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் தனது ஆசிரியரை பழிவாங்க முடிவெடுத்துள்ளான்.

இதையடுத்து, இன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை நோக்கி அந்த மாணவன் வேகமாக ஓடியுள்ளான். பின்னர் அவனிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சுடத் தொடங்கினான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

பெரும் அதிர்ச்சி.. கண்டித்த ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை சுட்ட மாணவன்..!

எனினும், மாணவன் ஆசிரியரை விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளான். அதில் ஆசிரியர் காயமடைந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் மாணவனை பிடித்துள்ளனர். எனினும், சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிவிட்டான். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தோட்டாக்கள் உடலில் முக்கியமான உறுப்புகளைத் தாக்க வில்லை. ஆசிரியர் காயமடைந்திருந்தாலும், அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like