1. Home
  2. தமிழ்நாடு

நாடகம் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை!!

நாடகம் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை!!

தென் கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது.

ஆனால் பக்கத்து நாடான தென்கொரியாவுக்கு வடகொரியாவில் நடக்கும் பல விஷயங்கள் உடனே தெரிந்துவிடும். அந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் தான் அங்கு நடப்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றன.


நாடகம் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை!!

இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள் பார்த்தால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறினார்.

இந்நிலையில் வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரிய நாடகம் பார்த்ததாக கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினர். இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு சமீபத்தில் நிரூபணமானது.

இதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட கொரியாவின் இச்செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like