1. Home
  2. தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை.. இந்து முன்னணி தலைவர் உட்பட 2 பேர் கைது..!

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை.. இந்து முன்னணி தலைவர் உட்பட 2 பேர் கைது..!

தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா விற்பனை செய்த வழக்கில் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டையில் மளிகைக் கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று, அம்மாபேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்யும் ஸ்ரீதர் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.


அவரிடம், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 9 கிலோ அளவில் இருந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், குட்கா மற்றும் பான் மசாலாவை, இந்து முன்னணியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிகரெட் வியாபாரி ஸ்ரீதர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like